முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தயவுசெய்து நல்ல மனசுக்காரங்க இதைப் படிக்காதீங்க!?

Subbiahpatturajan

ஆம் இது மத வெறி பிடித்த மனநோயாளிகளுக்கான பதிவு மட்டுமே!?

ஆம் இது மத வெறி பிடித்த மனநோயாளிகளுக்கான பதிவு மட்டுமே!?
15லட்சம்  தரவில்லை ஆனாலும் பிடித்திருக்கிறது..! 

10 கோடி வேலை வாய்ப்பு தரவில்லை...! ஆனாலும் பிடித்திருக்கிறது..!

ருபாய் மதிப்பு கூடவில்லை..ஆனாலும் பிடித்திருக்கிறது..!

பெட்ரோல் விலை குறைய வில்லை..ஆனாலும் பிடித்திருக்கிறது..!

கருப்பு பணம் மீட்கப்படவில்லை...ஆனாலும் பிடித்திருக்கிறது..!

பொருளாதாரம் வளரவில்லை..ஆனாலும் பிடித்திருக்கிறது..!

பெண்களுக்கு பாதுகாப்பில்லை...ஆனாலும் பிடித்திருக்கிறது..!

மதக்கலவரம் நடக்கிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..!

வங்கிகள் திவாலாகிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..!

லாபத்தில் இயங்கும் பொதுத்துறை ஏலம் போகிறது.. ஆனாலும் பிடித்திருக்கிறது..!

கார்பரேட்களுக்கு பல்லாயிரம் கோடிகள் தள்ளுபடி செய்யப்படுகிறது..ஆனாலும் பிடித்திருக்கிறது..!

மாநில உரிமைகள் பறிபோகிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..!

கல்வி நிலையங்கள் தாக்கப்படுகின்றன..ஆனாலும் பிடித்திருக்கிறது..!

ஜனநாயகம் நசுக்கப்படுகிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..!

வன்முறை பேயாட்டம் ஆடுகிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..!

நீதிபதிகள்..பந்தாடப்படுகிறார்கள்..ஆனாலும் பிடித்திருக்கிறது..!

பத்திரிக்கைகளின் குரல் வலை நசுக்கப்படுகிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..!

25 வருஷம் ஆட்சி செய்த குஜராத்தில்.. குடிசையை மறைக்க.. தடுப்பு சுவர் கட்டப்பட்டது..ஆனாலும் பிடித்திருக்கிறது..!

இத்தனைக்கு பிறகும் ஏன் எனக்கு பிடித்திருக்கிறது..!!??
ஏனென்றால் ''மதம் என்ற பெயரில் ஆளும் கட்சி ஊட்டிய போதை''  பிடித்திருக்கிறது...!!!

ஆளும் கட்சி இந்து மக்களுக்காக என்ன செய்தது ?.

ஒன்றுமே செய்யவில்லை என்பது தான் கசப்பான உண்மை !!!.

மசூதியை இடித்து கோவில் கட்டுவதால்  , இந்து மக்களுக்கு என்ன நன்மை ?.

முத்தலாக் தடை சட்டத்தால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?.

மாடுகளை உணவுக்காக கொல்வதை தடை செய்ததால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?.

காஷ்மீரின் தனி அந்தஸ்து நீக்கத்தினால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?.

CAA, NRC சட்டத்தால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?.

இனியும் இடிப்போம்! என கூறும் மசூதிகள் இடிக்கப் படுவதால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?.

மதக்கலவரங்களை உருவாக்கி சிறுபான்மையினரை கொன்றொழிப்பதால்  இந்து மக்களுக்கு என்ன நன்மை ?.

7 வருடமாக ஆட்சியில் இருந்தும் ஏழை இந்து மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை கூட வழங்காத வக்கற்ற அரசால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?.

*பாஜக இந்துக்களுக்கு செய்த ஒரு நன்மையையாவது  கூற முடியுமா? 

 உங்களால் முடியாது இருந்தும் ஆதரிக்கிறீர்கள் என்றால் அதுக்கு காரணம் என்ன ?.

நமக்கு ''கரண்டு பில்'' 1000ரூபாய் அதிகம் வந்ததை கண்டு வருத்தப்படாமல் பக்கத்து வீட்டு கரண்டு பில்லில் 5000 ரூபாய் கூடுதல் வந்ததை அறிந்து குதூகலிப்பது போன்ற  ஒருவித மனநோய் தான் அது,

அதாவது நமக்கு நன்மையில்லா விட்டாலும்,  முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும்  நிம்மதி  இழக்கிறார்களே என்கிற சந்தோச  மனோவியாதிதான் அது!   

 முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும்  கொன்றொழிக்க படுவதில் சுகம் காணும் மனோவியாதி தான் அது! 

 முஸ்லிம்கள் மற்றும்   கிறிஸ்தவர்களுக்கு அரசியல் சாசனம் வழங்கிய   உரிமைகளை  பறிக்கப்படுவதை பார்த்து பரவசம் கொள்ளும் மனோ வியாதி தான் அது !!!.

ஆளும் கட்சியின் முன்னாள் தலைவர், முன்னாள் மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா பிரதமரின் ஆட்சி குறித்து கூறியது போல், ஒரு தனி மனிதனுக்குப் பைத்தியம் எனில் புரிந்து கொள்ள முடிகிறது !!!. 

ஒரு நாட்டிற்கே பைத்தியம் பிடித்தால் என்ன செய்ய முடியும் ?.

ஆம் !!!. ஒரு தனிமனிதனுக்குப் பைத்தியம் பிடித்தால் குணப்படுத்தி விடலாம். ஆனால், ஒரு நாட்டிற்கே பைத்தியம் பிடித்தால் என்ன செய்ய முடியும் ?.

இது இந்த நாட்டின் அரசியலை ஆதரிக்கும் மனநோயாளிகளுக்கான பதிவு !!!.

கருத்துகள்

S.m.kumar இவ்வாறு கூறியுள்ளார்…
அவர் 15 லட்சம் ரூபாய் தருகிறார் என்று அக்கவுண்டில் போடுகிறேன் என்று சொல்ல வில்லை வெளிநாட்டு பதுக்கல் பணம் இந்திய வந்தால் அவ்வளவு பணம் போடலாம் என்று சொல்லி இருந்தே ஆனால் இவர்கள் தவறான முறையில் சித்தரித்து விட்டார்கள்
Subbiah Patturajan இவ்வாறு கூறியுள்ளார்…
உலகிலேயே இந்தியாவில் தான் வரி வசுலிப்பு அதிகம் நண்பரே...
பிறப்பில் இருந்து இறப்பு வரை

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...